சாலை விபத்தில் தேவேந்திரனும் நாரதரும் அகால மரணம்.
அந்த வினாடியே அங்கு தோன்றிய சாத்தான் இருவரின் உயிர்களையும் தன்னகத்தே வாங்கிக் கொண்டு அவர்களைப் போலவே தேவ உருக்கள் கொண்டு தேவலோகம் சென்றான்.
முற்றியது.
பின்னுரை:மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வலைப்பதிவர் அனுராதாவின் கணவன் நான்.
நோயின் கொடுமையை மறப்பதற்காக அவளிடம் தினமும் பல நகைச்சுவை கலந்த கதைகளைச் சொல்வேன்.அப்போது தோன்றியது தான் இந்தக் கதையும்.தற்போது அனுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.கிட்டத்தட்ட சுயநினைவு இழந்த நிலையில் இருக்கிறாள்.கதைசொல்லும் நிலையில் நானோ,கேட்கும் நிலையில் அவளோ நிச்சயமாக இல்லை.இந்நிலையில் இந்தத் தொடரைத் தொடர்ந்து எழுத முடியாத நிலைமையில் உள்ளேன்.தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படும்.அதற்கான காலம் கனியும்.அப்போது தொடர்கிறேன்.
இந்தத் தொடரை நான் பணி புரிந்த ஊரான திண்டுக்கல்லைச் சேர்ந்த சக வலைப் பதிவரான சரவணன் என்கிற உண்மைத் தமிழன் அவர்களுக்கும்,சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு சக வலைப் பதிவரான கிருஷ்ணகுமார் என்கிற லக்கிலுக் அவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.நேரமும் காலமும் ஒத்துழைத்தால் பின்னொரு நாளில் இவர்களைச் சந்திப்பேன்.
நியமனத்திற்கு முன்பே ராஜினாமாக் கடிதம் பெறப்பட்டது!!!
"இனிமெத் தான் பாக்கணும்."இது நாரதர்.
"ஏன் அங்கே இங்கேன்னு இடம் பாத்துகிட்டு?பேசாமெ ஸ்டேட் கஸ்ட் ஹவுசிலெ போய்த் தங்கலாமே.நா ஏற்பாடு பண்ணிட்றேன்."
தேவேந்திரனும் நாரதரும் தலையசைத்து ஒப்புதலைத் தெரிவித்தனர்.
"சரி.நீங்க பாக்கப் போற ரகசிய வேலை என்னன்னு தெரிஞ்சிக்கலாமா"
"அதெல்லாம் யார் கிட்டேயும் சொல்லக் கூடாது.சொன்னா அதுக்குப் பேரு ரகசியமில்லே."
"சரி என்னிக்கு வேலையெ ஆரம்பிக்கப் போறீங்க?"
"நாளைக்கே"
"ஓ.அப்படியா!மீண்டும் நாளைக்குச் சந்திப்போமா?"
"இல்லீங்க ,நாளைக்கே நாங்க வந்த வேலையெ ஆரம்பிச்சுடுவோம்.நாங்க கட்சி உறுப்பினர்கள் என்பதையோ பொறுப்பிலெ இருக்கிறவங்க என்பதையோ அனாவசியமா வெளியெ காட்டிக்கமாட்டோம்.தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே சொல்லுவோம்.எங்க நியமனக் கடிதத்தையும் உறுப்பினர் கார்டுகளையும் கொடுத்தனுப்பியிருங்க.பின்னாலெ தேவெபட்டா சந்திப்போம்.நாங்க வரட்டுங்களா?"
கலைஞர் துரைமுருகனைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தார்.
துரைமுருகனும் உடனே தலையை ஆட்டிக் கொண்டே எழுந்து கழக லெட்டர் பேடை எடுத்து தேவேந்திரனிடமும் நாரதரிடமும் ஆளுக்கு நாலைந்து தாட்களைக் கிழித்துக் கொடுத்தார்.
"இதுலெ ஒவ்வொண்ணுலேயும் கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுங்க."
இருவரும் முழித்தார்கள்.
"என்ன இது?"
"உங்க ரெண்டு பேர்களையும் பொறுப்புகள்லெ நியமிக்கிறோம்லியா.ஏதாச்சும் பிரச்சனை வந்தா நீங்க ராஜினமா செஞ்சிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததா உபயோகிச்சுக்குவோம்லெ."
"அதுக்கு ஒரு கையெழுத்துப் போறும்லெ"
"ஒவ்வொண்ணும் ஒவ்வொரு காரியத்துக்குப் பயன்படுங்கிறதுக்குத் தான் மொத்தமா வாங்கி வச்சுக்கிறது.வருத்தம் தெரிவிக்கிறதுக்கு,மன்னிப்புக் கேக்குறதுக்கு,தேவப்பட்டா உங்க பேர்லெ அறிக்கை வெளியிட்றதுக்கு இப்பிடி பலது இருக்கே"
தேவேந்திரன் இதை எதிர்பார்க்கவில்லை.கலைஞர் ஏதாவது சொல்வாரென்று அவர் முகத்தைப் பார்த்தான்.அவரோ காலையிலிருந்து இவ்வளவு நேரம் வரை இன்னும் யாரும் தன் காலில் விழவில்லையே என்ற கடுப்பில் இருந்ததினால் ரொம்பவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.
துரைமுருகன் பேனாவை நீட்டினார்.
நாரதர்"வேண்டாம் வேண்டாம் எங்க பேனாவிலேயே கையெழுத்துப் போடுகிறோம்"என்று தனது சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துத் தேவேந்திரனிடம் நீட்டினார்.தேவேந்திரன் கையொப்பம் போட்டபிறகு தானும் கையொப்பம் போட்டு அவ்வளவு தாட்களையும் துரைமுருகனிடம் நீட்டினார்.அவைகளைப் பெற்றுக் கொண்ட துரைமுருகன் ஒவ்வொரு தாளையும் ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவை கையெழுத்து இருக்கிறதா என்பதைப் பார்த்து உறுதி செய்து கொண்டார். பிறகு இருவரையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தார்.அங்கு நின்றிருந்த தனது அரசியல் பிஏவான அங்கமுத்துவிடம் அறிமுகப் படுத்தினார்.
"அங்கமுத்து.இவங்க ரெண்டு பேர்களுமே தலமெக்கு ரொம்பவும் விசுவாசமான ஆளுங்க.இவங்களெ ஸ்டேட் கஸ்ட் ஹவுசிலெ கூட்டிகிட்டுப் போயி தங்க வச்சிருங்க.அப்பிடியே அறிவாலயம் போயி இவங்க ரெண்டு பேருக்குமே நா சொல்ற மாதிரி நியமனக் கடிதத்தயும் உறுப்பினர் அட்டைகளையுந் தயாரிச்சுகிட்டு மீண்டும் இங்கே வாங்க."
அங்கமுத்து கேட்டார். "கோல்டா சில்வரா?"
"மடையா மடையா.ரெண்டுமே பிளாட்டினண்டா.சீக்கிரம் போ"
உடனே அங்கமுத்துவின் முகம் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார்.பிளாட்டினமா!"
"ஆமா.போயி விசயத்தெக் கவனமா முடிச்சிட்டு வா.வேணுன்னா கூட ஒரு ஐஜியையும் அனுப்புறேன்.சீக்கிரம் போ."
"மிகப் பலமான பணிவுடன் அங்கமுத்து இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
திமுகவில் தேவேந்திரனுக்குப் பொறுப்பும்,கலைஞரின் எதிர்பார்ப்பும்
துரைமுருகன் சொன்னதைக் கேட்ட கலைஞரின் முகம் மலர்ந்தது."அப்படின்னா இவங்களெ 'மாநிலங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் பிரிவு'ன்னு ஒண்ணெ ஏற்படுத்தி அதுலெ ஆந்திர மாநிலத்துக்குப் பொறுப்பாளராப் போட்றலாம்."
தேவேந்திரன் இதனை ஆட்சேபித்தான்."அதெல்லாம் வேண்டாம்
தலைவரே.நான் பொறந்தது மட்டுமே ஆந்திரா தவிர அங்கே எனக்கு யாரையுந் தெரியாது.ஸோ..(ஆங்கிலம்!)பேசாமெ என்னெ வெளிநாடுகள் பிரிவு அப்படின்னு ஒரு பிரிவை ஏற்படுத்தி அதிலெ என்னெப் பொறுப்பாளராவும் என் பிஏ நாரதரெ துணைப் பொறுப்பாளராவும் நியமிச்சுருங்க.அதுதான் எல்லாருக்கும் செளகர்யமா இருக்கும்"என்றான் தேவேந்திரன்.
கலைஞர் யோசனையுடன் துரைமுருகனையும் ஸ்டாலினையும் பார்த்தார்.இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.
பிறகு கலைஞர் தேவேந்திரனைப் பார்த்தார்."உங்களைப் பார்த்தால் நல்ல புத்திக் கூர்மையுடையவரென்று தெரிகிறது.சரி.உங்கள் விருப்பப்படியே நியமிக்கிறேன்.மகிழ்ச்சி தானே"என்றார்.
"மிகவும் நன்றி தலைவரே மிகவும் நன்றி."
இப்படிச் சொல்லிவிட்டுத் தேவேந்திரன் தன் கால்களில் சாஷ்டாங்கமாக விழுவானென்று கலைஞர் ரொம்பவும் எதிர்பார்த்தார்.ஆனால் அப்படியெல்லாம் தேவேந்திரன் விழவில்லை.சும்மா நன்றி சொன்னதோடு நிறுத்திக் கொண்டான்.
ஸ்டாலினைப் பற்றிக் கலைஞரின் கவலை
ஸ்டாலின் தொடர்ந்தார்."என்னாலெ நம்பமுடியல்லியெ."
"சாயிபாபா கலைஞர் கிட்டெ என்கையெப் பிடிச்சிக் கொடுத்துகிட்டே எங்களெ அறிமுகப்படுத்தும்போது சொன்னாரே .நீங்க கவனிக்கலியா"
"கவனிச்சேன்.கவனிச்சேன்.ஆனாஅவர் தெலுகிலெ பேசினது கொஞ்சம் புரியல்லெ."
தேவேந்திரன் துரைமுருகனைப்பார்த்துக் கேட்டான்."ஏன் சார் நீங்க கூடக் கவனிக்கலியா?"
இப்போது துரைமுருகனுக்குக் கவலையாகிவிட்டது.கவனிக்கவில்லை என்று சொன்னால் தலைமையின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.கவனிச்சேன்னு சொன்னால் தேவேந்திரன் சொல்வதை மறுத்துப் பேச முடியாது.சாயிபாபா என்ன தான் சொன்னார் என்பது மூவருக்கும் சுத்தமாகத் தெரியாத நிலை.இந்த அருமையான சந்தர்ப்பத்தை எப்படியாகிலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டார்.
"நான் நல்லாக் கவனிச்சேனே.அவரு உங்களெப்பத்தி கலைஞரு கிட்டெ இதெத்தானெ சொன்னாரு.அப்பவே நினெச்சேனே.நீங்க சாயிபாபாவுக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவருன்னு!"
துரைமுருகன் சொன்ன பதிலால் ஸ்டாலினும் கலைஞரும் திருப்தி அடைந்தார்கள்.
"சரி.வேறென்ன சொன்னார்?"
துரைமுருகன் ஏதோ சொல்லமுற்பட்டதற்குள் தேவேந்திரன் முந்திக் கொண்டான்."எனது ரகசிய வேலைகளையெல்லாம் இவர்கள் தான் முடித்துக் கொடுப்பார்கள்.எனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்.தற்போது முக்கியமான மிகவும் ரகசியமான வேலை ஒன்று தமிழ்நாட்டில் செய்ய வேண்டியிருக்கிறது.எனவே ஒரு ஆறு மாதத்திற்கு இவர்கள் இருவரையும் உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.எனக்கும் வேலை முடிந்தாற்போல் இருக்கும்.வெளியே உங்கள் கட்சிக்காரராக அறிமுகப் படுத்தி வையுங்கள்.இதற்குக் கைம்மாறாக என்ன வேண்டுமோ இவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்'என்று சொன்னாரே?!"
இப்போது துரைமுருகன்."ஆமா ஆமா சாயிபாபா அப்பிடித்தான் சொன்னாரு.கரெக்டு"
ஸ்டாலின் முகமும் கலைஞரின் முகமும் பிரகாசமானது.
"அப்படின்னா துரைமுருகன்.இவங்களுக்கு உறுப்பினர் கார்டு ரெடி பண்ணிருங்க.இவங்க தமிழ்நாடு பூரா சுத்திப் பாக்குறதுக்கு வசதியா ரெண்டு போஸ்டு கொடுத்திடலாம்.என்ன போஸ்டு கொடுக்கலாம்......?"என்றவாறே ஸ்டாலின் கலைஞரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.
"ஆந்திராவிலேர்ந்து வந்திருக்கிறதினாலெ நம்ம கச்சியுடைய ஆந்திரா மாநிலப் பொறுப்பாளரா நியமிச்சுடுவோமா?"
"கச்சின்னு சொல்லாதேன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கிறேன்.நல்லா நாக்கை மடக்கி கட்சி அப்பிடீன்னு உச்சரிக்கணும்"என்று திருத்தினார்
கலைஞர்.
"கச்சி"
"என்னிக்குத்தான் கட்சின்னு சொல்லப் போறியோ!.......(சிறிது மெளனம்).இந்த அழகுலெ எனக்கப்புறம் உன்னெ முதலமைச்சராக்கணும்னு சொல்றெ.என்ன செய்யறதுன்னே தெரியல்லெ.....தம்பி ஸ்டாலின்!மேடைப் பேச்சுத் தமிழுக்கென்றே பெயர் பெற்றதடா நம்ம கட்சி.எப்படித்தான் கட்டிக் காப்பாத்தப் போறியோ!"
கலைஞரின் முகத்தில் வேதனை ரேகைகள் ஓடின.
கலைஞருடன் அறிமுகம்
பார்த்தான் தேவேந்திரன்.இப்போது விட்டால் அடுத்த சந்தர்ப்பம் கிடைப்பது சிரமம் என்பதை உணர்ந்தான்.உடனே நாரதரையும் இழுத்துக் கொண்டு கூட்டத்தில் மின்னலைப் போல முன்னேறி வாசலை அடைவதற்கும் சாயிபாபா வாசல் முதல்படியில் காலை வைத்தவாறே இறங்குவதற்கும் சரியாக இருந்தது.சாயிபாபாவின் கண்கள் தேவேந்திரனை நேருக்கு நேராகச் சந்தித்தன.இது போதாதா?தேவேந்திரனின் கண்களின் ஆகர்ஷணத்தைத் தாங்கமுடியாமல் சாயிபாபா திக்பிரமை பிடித்தவராய் நின்றார்.தேவேந்திரன் சாயிபாபாவின் அருகில் சென்று அவரது காதுகளில் ஏதோ ஓதினான்.உடனே சாயிபாபா சுயநினைவு வந்தவராய் தேவேந்திரனது இரு கைகளையும் பற்றிக் கொண்டு திரும்பி மீண்டும் கலைஞரின் வீட்டுக்குள் நுழைந்தார்.நாரதரும் இருவரையும் பின் தொடர்ந்தார்.சாயிபாபாவை வழியனுப்புவதற்காக வாசல் வரை வந்த துரைமுருகனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவரும் பின் தொடர்ந்தார்.
உள்ளே சென்ற சாயிபாபா நேராகக் கலைஞர் அமர்ந்திருந்த சோபாவின் அருகே சென்றார்.தேவேந்திரனின் இரு கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டு கலைஞரிடம் நீட்டியவாறே ஏதோ சொன்னார்.சாயிபாபாவின் பின்னால் நின்றிருந்த அல்லக்கைகளுக்கே சாயிபாபா சொன்னது ஒன்றும் புரியவில்லை.எனவே அவர்கள் சாயிபாபா சொன்னதை மொழிபெயர்க்க முடியாமல் முழித்தனர்.அவர்கள் திணறலைக் கண்ட சாயிபாபா மீண்டும் கலைஞரிடம் ஏதோ சொன்னார்.ஹூஹும்!யாருக்கும் புரியவில்லை.பிறகு தேவேந்திரனின் இரு கைகளையும் கலைஞரிடம் ஒப்படைப்பதுபோல சாயிபாபா பாவனை செய்து அப்படியே தேவேந்திரனின் கண்களைப் பார்த்தார்.தேவேந்திரனின் கண்களில் முன்பு இருந்த ஆகர்ஷண சக்தி இப்போது இல்லை.உடனே சாயிபாபா இரு கரங்களையும் ஆசீர்வாதம் செய்வது போல உயர்த்தியபடி சிரித்துக் கொண்டே மீண்டும் வெளியேறினார்.வழியனுப்புவதற்காகத் துரைமுருகன் சாயிபாபாவைப் பின்தொடர்ந்தார்.
இப்போது கலைஞரின் முன் தேவேந்திரனும் நாரதரும் நின்றிருந்தனர்.சுற்றிலும் கலைஞரின் குடும்பத்தினர்கள் நின்றிருந்தார்கள்.கலைஞர் இருவரையும் பார்த்துச் சிரித்தவாறே,"உக்காருங்க"என்றார்.இருவரும் அவரின் வலது பக்கத்தில் உள்ள நீண்ட சோபாவில் அமர்ந்தார்கள்.
ஸ்டாலின் தொண்டையைச் செறுமிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
"நீங்க இருவரும் சாயிபாபாவுக்கு வேண்டியவர்களோ?"
ஆமாம் என்பதற்கு அடையாளமாகத் தேவேந்திரன் தலையசைத்தான்.
"நான் அப்பவே நினெச்சேன்.சாயிபாபா கையெப் பிடிச்சிகிட்டு வந்தப்பவே நெனச்சேன் ரெண்டு பேரும் அவருக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு."
"ஆமாங்க"என்றான் தேவேந்திரன்.
"பரவாயில்லையே.தமிழ் பேசுறீங்களே.சரி.உங்க பேரு?"
"எம்பேரு இந்திரன்.ஆந்திராவிலெ தேவகிரின்ற ஊரு.எம்பேரோட ஊரு பேரையுந்சேத்து தேவேந்திரன்னு மாத்திகிட்டேன்.இவரு என் பிஏ.பேரு நாரதரு"
'என்னடா பேரு நாரதருன்னு சொல்றாரு.ஒருவேளை ரெட்டிகாருன்னு சொல்றமாதிரி ஏதோ ஒரு "ரு".இதப் போயி விளக்கம் கேட்டா தப்பா நெனப்பாங்களோ.சரி.மேலே பேசுவோம்'இவ்வாறாக ஸ்டாலினின் சிந்தனை ஓடியது.
"ரெம்ப(ரொம்ப இல்லை.ரெம்ப தான்)மகிழ்ச்சி.என்ன தொழில் பண்றீங்க?"
"தொழிலா?ஏதொ ஒரு பத்துப் பதினெஞ்சு நாடுகள்ளெ கோல்டு பிசினெஸ் பண்ணிகிட்ருக்கேன்.சாயிபாபாவுக்குத் தங்க மோதிரம்,செயின்,சின்னச் சின்னதா சாமி சிலைகள்,சிவலிங்கம்ன்னு சப்ளை செய்றது நாந்தான்.ஹோல்சேல் ஏஜண்ட்னு வச்சுக்குங்களேன்."
கலைஞர் வீட்டில் சாயிபாபா
"நேரே கோபாலபுரம் சென்று கலைஞரைச் சந்திப்போம்.மற்ற ஐடியாவைச் சமயம் போல் ஏற்படுத்திக் கொள்ளலாம். "என்றார் நாரதர்.
இருவரும் கோபாலபுரத்தை அடைந்தனர்.கலைஞரின் வீட்டுக்கு முன்பு பெருங்கூட்டம் கூடி இருந்தது.கூட்டத்தை முண்டி அடித்துக் கொண்டு இருவரும் முன்னேறினர்.வீட்டு வாசலை அடைந்த போது கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த இரண்டு காவலர்கள் வழியை மறித்தனர்.
அருகில் நின்றிருந்த ஒருவரிடம் நாரதர் கேட்டார்
."ஏன் இவ்வளவு கூட்டம்?"
"சாயிபாபா வந்திருக்காருப்பா.தெலுங்கு கங்கைக் கால்வாயெ ரிப்பேர் செய்ய ரூவா தர்றதுக்கு வந்திருக்காருப்பா.உள்ளே போயிகிறாரு.என்னத்தெத் தரப் போராரோ.யாரு கண்டா?"
உள்ளே கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் சாயிபாபாவின் கால்களில் சாஷ்டங்கமாக விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்.சாயிபாபா தனது இடதுகைவிரல்களின் இடுக்கில் மறைத்து வைத்திருந்த குங்குமக் கட்டிகளில் ஒன்றை வலது கைக்கு மாற்றி அப்படியே வட்டமாக இரண்டு மூன்று முறை சுற்றினார்.குங்குமக் கட்டியை ஆள்காட்டி விரல் கட்டை விரல் ஆகியவற்றின் நுனியில் கொண்டுவந்து பிசைந்து கொண்டே நீட்டினார்.என்ன ஆச்சரியம்?அவர் வலது கையிலிருந்து பொல பொலவென குங்குமம் பிரசாதமாக விழுந்தது.தயாளு அம்மாள் அதைப் பயபக்தியுடன் இரு கைகளிலும் பெற்றுக் கொண்டு கலைஞரிடம் நீட்ட,கலைஞர்,அதை எடுத்துத் தயாளுவின் நெற்றியில் நடு வகிட்டில் பூசினார்.
அருகில் நின்றிருந்த துரைமுருகன் பிரமித்தார்.'இதென்னடா,வெறுங்கையை இப்படி அப்படி ஆட்டிக் கொண்டே குங்குமத்தை வரவழைத்துத் தர்ராரே!நாமும் காலில் விழுந்தா என்ன?நமக்கு என்ன தருவார்?'என்று நினைத்துக் கொண்டே அவரும் காலில் விழுந்து கும்பிட்டார்.எழுந்து கொண்டே இரண்டு கைகளையும் நீட்டினார்.சாயிபாபா துரைமுருகனின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தவாறே மீண்டும் வலது கையை இப்படி அப்படி என்று சுழற்றினார்.அவர் போட்டிருந்த ஜிப்பாவின் வலதுகைப் பக்கத்திலிருந்து ஒரு மோதிரம் சாயிபாபாவின் உள்ளங்கையில் விழுந்தது.அதை அப்படியே துரைமுருகனிடம் நீட்டினார்.துரைமுருகனும் பயபக்தியுடன் மோதிரத்தைப் பெற்றுக் கொண்டார்.துரைமுருகனுக்குச் சந்தோசந் தாங்கவில்லை.காலில் விழுந்ததிற்கே மோதிரம் உடனடி சப்ளையாக இருக்கிறதே!வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டே அருகில் நின்றிருந்த கலைஞரின் மகன் ஸ்டாலினிடம் காட்டினார்.பிறகு ஸ்டாலின் பக்கம் கையைக் காட்டிக் கொண்டே சாயிபாபாவைப் பார்த்து,"தளபதி அண்ணனையும் ஆசீர்வாதம் பண்ணுங்கோ"என்றார்.உடனே ஸ்டாலினும் குனிந்து சாயிபாபாவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டார்.அடுத்த விநாடி அவருக்கும் ஒரு தங்க மோதிரம்!இவ்வளவு கூத்துகளையும் கலைஞர் தன் சோபாவில் அமர்ந்தவாறே பார்த்த்க் கொண்டிருந்தார்.
இப்போது துரைமுருகன் யோசிக்க ஆரம்பித்தார்.இத்துடன் விட்டு விட்டால் சாயிபாபா போனதும் இந்த மோதிரத்தைக் கலைஞர் கேட்டுவிட்டால் என்ன செய்வது?உடனே சாயிபாபாவைப் பார்த்து அப்படியே தலைவருக்கும் ஒரு மோதிரம் கொடுங்களேன்.வேணுன்னா அவர் சார்பாக நான் காலில் விழுகிறேன்"என்றாரே பார்க்கலாம்!ஆனால் சாயிபாபா வேண்டாம் என்பதற்கு அடையாளமாகக் கைகளை ஆட்டியவாறே என்னமோ சொன்னார்.யாருக்கும் புரியவில்லை.அப்போது சாயிபாபாவின் அருகில் நின்றிருந்த ஒரு அல்லக் கை,"கலைஞருக்கு எதற்கு மோதிரம்?அவர் தான் என் இதயத்தில் இருக்கிறாரே என்று பாபா கூறுகிறார்.ஜெய் சாயிராம்!!" என்றார்.கலைஞரும் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார்.
தேவேந்திரனும் நாரதரும் தங்களின் ஞானக் கண்களால் அந்தக் கண்ராவிக் காட்சிகளைக் கண்டார்கள்.
நாரதரின் அசத்தல் ஐடியா
"இதுவரை எடுத்த இரண்டு முயற்சிகளும் தோல்வி.இனி என்னசெய்வது?வேறு எங்கே போய் யாரைப் பார்ப்பது?"என்றார் நாரதர்.
"இந்திரலோகத்தில் யாரையாவது தேர்ந்தெடுக்கலாம் என்றாலோ யாருக்குமே தகுதி இல்லை என்று ஒரே அடியாக முருகப் பெருமான் அறிவித்து விட்டார்"என்று அலுத்துக் கொண்டான் தேவேந்திரன்.
"நீயே தேவேந்திரனாகத் தொடர்ந்து இருந்து விடேன்.பிரச்சனையும் முடியும்,எனக்கு அலைச்சலும் மிச்சம்"என்றார் நாரதர்.
"அது மட்டும் முடியாது நாரதரே.சொன்ன சொல்லைத் திரும்பப்பெற முடியாது."
"சரி.வேறு யாரைப் பார்க்கலாம்?பேசாமல் பூலோகத்திற்குச் செல்வோமா?அங்கே தான் பலவகையான நரபுருஷர்கள் இருக்கிறார்களே."
பூலோகமா என்று யோசித்தான் தேவேந்திரன்.
"என்ன தயக்கம்?நீ தான் பலமுறை பூலோகத்தில் வாழ்ந்திருக்கிறாயே.முன்பொருதடவை........"
"
போதும் நாரதரே,போதும்.முன்பொருதடவை என்று சொல்லிக் கொண்டே பழைய கதைகளை ஞாபகப்படுத்தாதீர்கள்.இப்போது ஆக வேண்டியதைப் பேசுவோம்"
"சரி.தேவேந்திரா,நன்றாக யோசனை செய்து பார்த்ததில் பூலோகத்திற்குச் சென்று தேடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது.போவோமா பூலோகம்"ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டே கேட்டார் நாரதர்.
"ஆகட்டும் நாரதரே.பூலோகத்தில் எங்கே சென்று தேடுவது?"
"எல்லாம் நம் நற்றமிழ் நாட்டிலெ தான்.வேறெங்கே! என்றார் நாரதர்.
"சரி.நாம் இதே தோற்றத்தில் செல்வதா இல்லை...."
"இதே தோற்றத்தில் சென்றால் ஏதோ மோசடிப் பேர்வழிகள் என்று போலீசார் நம்மைப் பிடித்து கேஸ் போட்டு விடுவார்கள்."
"என்னது,என்னென்னமோ சொல்கிறீரே,போலீசார்...ம்..கேஸ்..என்று.என்ன அது."
"அந்தச் சொற்கள் ஆங்கிலம் என்றொரு மொழிக்குரியவை.போலீஸ் என்றால் தமிழில் காவல் துறை என்று அர்த்தம்.கேஸ் என்றால் வழக்கு என்று அர்த்தம்."
"அப்படியே தமிழிலேயே சொல்லி இருக்கலாமே நாரதரே,ஏன் திடீரென்று வேற்று மொழியைக் கலந்து பேசுகிறீர்கள்?"
"தேவேந்திரா.நாம் போவது தமிழ்நாடு.அதுவும் அதன் தலைநகரத்திற்குச் செல்கிறோம்.இங்கே ஏறத்தாழ அனைவருமே ஆங்கிலச் சொற்கள் கலந்து தான் பேசுவார்கள்.அதுவும் பிராம்மணார்த்திகள் ஆங்கிலத்திலேயே அங்கங்கே தமிழைக் கலந்து பேசுவார்கள்.நாம் தான் எச்சரிக்கையாகப் புரிந்து கொள்ள வேண்டும்"
"ஏன்?தமிழில் அதற்குறிய சொற்களே கிடையாதா?தமிழை விட ஆங்கிலம் அவ்வளவு வளமை வாய்ந்த மொழியா?"
"அப்படியெல்லாம் இல்லை.அந்தந்த மாநிலங்களில் அவரவர் மொழிகளில் மட்டுமே பேசுகின்றனர்.கர்நாடகத்தில் கன்னடம்,ஆந்திராவில் தெலுங்கு,கேரளாவில் மலையாளம்,வங்காளத்தில் வங்காளம்,ஒரிசாவில் ஒரியா.குஜராத்தில் குஜராத்தி,சில மாநிலங்களில் பெரும்பான்மையோர் இந்தி என அவரவர்கள் மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தக் கலப்படமொழி.இங்கே அப்படிப் பேசினால் தான் மற்றவர்கள் மதிப்பார்கள்.இந்தக் கலப்பட மொழிக்குத் தமிங்கிலீஸ் என்று பெயராம்."
"யார் இப்படியெல்லாம் தமிழைக் கேவலப்படுத்தியது?"
"ஹூம்?எல்லாம் நம்மை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தான்."
நாரதர் விலாவாரியாகத் தேவேந்திரனிடம் விளக்கினார்.
தேவேந்திரனுக்கு ஒரே திகைப்பாக இருந்தது."சரி நாரதரே.நமது தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி அத்தகைய புலமை பெற்றவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோம்"என்றான்.
"நான் எக்காலத்திலோ மாற்றிக் கொண்டு விட்டேன்.அடிக்கடி பூலோகப் பயணம் செய்கின்றவனல்லவா?நீ மாற்றிக்கொள்"
"சரி,நாரதரே,மாற்றிக்கொண்டு விட்டேன்.நடையும் தோற்றமும் மாறிவிட்டன.ஆனால் உடை?எப்படியும் பூலோகத்தில் சிறிது காலம் இருக்க வேண்டும்.அதற்கேற்றாற்போல் உடையும் அமைய வேண்டும்."
'நாமோ எந்த இடத்திலும் வேலை பார்க்கப் போவதில்லை.வேலையும் தர மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.தமிழ்நாட்டின் தேசீய உடை வேட்டி சட்டை தான்.அதை அணிந்துகொண்டு போனால் ஒரு பய மதிக்க மாட்டான்.ஹும்..?என்ன செய்யலாம்?'நாரருக்கு மின்னல் வெட்டினாற்போல ஒரு யோசனை உதித்தது.உதட்டில் புன்னகையும் தோன்றியது.'சபாஷ் நாரதா' என்று மனதுக்குள் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார்.
"சீக்கிரம் சொல்லுங்கள் நாரதரே,என்ன உடை உடுத்தலாம்?"
"வேறென்ன அரசியல்வாதியின் உடை தான்"என்றார் நாரதர்.
"என்ன அரசியல்வாதியின் உடையா?அரசியல் வாதிக்கென்று ஒரு தனிப்பட்ட உடையா?
"அதெல்லாம் ஒன்றுமில்லை தேவேந்திரா.தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உடை தான்.என்ன ஒரு சில சின்னஞ்சிறிய மாற்றங்களுடன் உடுத்தினால் அரசியல்வாதியின் உடை ஆகிவிடும்.வேட்டி தான்.ஆனால் என்றும் எப்போதும் வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும்.நாம் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோ அந்தக் கட்சியை அடையாளப்படுத்திக் காட்டும் வண்ணங்கள் வேட்டியின் கரையாக இருக்க வேண்டும்.மேல் சட்டை முழுக்கை சட்டையாக இருக்க வேண்டும்.அதுவும் வெள்ளை வெளேர் தான்.சட்டையின் இடது பக்கத்தில் ஒரு பை.அதற்குள் என்ன வைக்கிறோமோ வைக்க மாட்டோமோ கட்சித் தலைவரின் உருவம் கொண்ட ஒரு அட்டை இருக்க வேண்டும்.அல்லது அவரது வாரிசுவின் உருவம் கூட இருக்கலாம்.ஆனால் பைக்குள் வைக்கும் அட்டை உருவம் மற்றவர்கள் பார்வைக்கு லேசாகத் தெரிய வேண்டும்.தோளில் ஒரு துண்டு கூடப் போர்த்திக் கொள்ளலாம்.அல்லது ஒரு பக்கமாகப் போட்டுக் கொள்ளலாம்.அதிலும் கட்சிக் கரையும்,சின்னமும் தெரிய வேண்டும்.அவ்வளவு தான்"
"அற்புதமாகச் சொல்கிறீர்கள் நாரதரே.அப்படியே உடுத்திக் கொள்வோம்.சரிஇங்கெல்லாம் எத்தனை கட்சிகள் இருக்கும்?ஏறத்தாழ..சீச்சீ..தமிழில் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறேனே.ஒரு ஆவரேஜா நான்கைந்து கட்சிகள் இருக்குமா?"
"நாசமாப் போச்சு.நான்கைந்தா?சொச்சம்?"
"நாரதரே.இதென்ன மொழி?
"ஓ!நாசங்கிறது சமஸ்கிருதம்.அதை நம்ம மொழின்னு இங்கிருக்கிறவா சொல்றா.சொச்சங்கிறது கலோக்கியலா சொல்றது.மீதம் என்ற சொல்லைத் தனியாகப் பயன்படுத்தாமல் 'மிச்சம் மீதம் என்கிறோமில்லையா!அந்த மிச்சத்தின் விகுதி சொச்சமாகி விட்டது"
"உங்கள் இலக்கணம் தவறு நரதரே.சொச்சமென்பது மிச்சத்தின்..."
நாரதர் குறுக்கிட்டார்."தவறோ சரியோ.அரசியல்வாதியின் பேச்சில் அர்த்தம்,தப்பு,தவறு கண்டுபிடிக்கக் கூடாது."
"பேசுவதில்கூட இவ்வளவு வசதி இருக்கிறதா?"
"பேசுவதில் மட்டுமா.இவர்கள் வாழ்றதைப் பார்த்தால் பிரமித்து போவாய்"
"சரி.உடை ஓகே.ஆனால் எந்தக் கட்சி உடை உடுத்துவது?"
"அது நம் விருப்பம் தேவேந்திரா.ஒரு நாளைக்கு ஒரு கட்சிக்கு ஒரு உடை."
"அது கூடாது நாரதரே.அவ்வாறு செய்வது தினம் தினம் கட்சி மாறுவதாக ஆகி விடுமல்லவா?"
"இங்கே என்ன வாழ்கிறதாம்.பலருக்கு அது தான் பொழைப்பே.பார்த்துக் கொண்டே வா?
"சரி முதலில் எந்தக் கட்சி உறுப்பினர் ஆகப் போகிறோம்?"
"இப்போதைக்குத் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க.வில் தான்."